மன்னாரில் அநுரவின் அரசியல் திட்டங்கள்! தமிழ் மக்களுக்காக கொந்தளிக்கும் நாமல்
மன்னார் காற்றாலை மற்றும் மணல் அகழ்வுத் திட்டங்களுக்கு எதிராக மக்கள் வெளிப்படுத்தும் கூட்டு எதிர்ப்பு, அரசாங்கத்திற்கு பலமான செய்தி என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமது எக்ஸ் தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ள அவர், திட்டங்களை முன்னெடுக்கும் முன் மக்கள், பிரதிநிதிகள் மற்றும் மதகுருமார்களுடன் கலந்துரையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளரால் இவ்வாணையைப் புறக்கணித்துச் செயற்பட வழங்கப்பட்ட உத்தரவு, மக்களின் விருப்பத்தை நேரடியாக மீறுவதாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அமைதியான போராட்டக்காரர்களை பொலிஸார் துன்புறுத்தியது கண்டிக்கத்தக்கது என்றும் நாமல் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய லங்காசிறியின் விசேட செய்தி தொகுப்பு இதோ....





CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam
