ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை இளைஞன் ஒருவர் படுகாயம்
இஸ்ரேலுக்கு எதிரான ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில், இலங்கை இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலின் பினைக் பிராக்(Bnei Brak) பகுதியில் ஒரு கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இலங்கை இளைஞன் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
தாக்குதல் நடந்தபோது அந்த இளைஞர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், ஏவுகணை வீழ்ந்ததில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் சிதறல்கள் காரணமாக அவர் காயமடைந்ததாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணைகள்
காயமடைந்த இளைஞன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், காயமடைந்த இளைஞனுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
