ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை இளைஞன் ஒருவர் படுகாயம்
இஸ்ரேலுக்கு எதிரான ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில், இலங்கை இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலின் பினைக் பிராக்(Bnei Brak) பகுதியில் ஒரு கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இலங்கை இளைஞன் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
தாக்குதல் நடந்தபோது அந்த இளைஞர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், ஏவுகணை வீழ்ந்ததில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் சிதறல்கள் காரணமாக அவர் காயமடைந்ததாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணைகள்
காயமடைந்த இளைஞன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், காயமடைந்த இளைஞனுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
