நாட்டின் பிரச்சினையை இரண்டு ஆண்டுக்குள் தீர்க்கலாம்:ரணில் கூறும் யோசனை
பொருளாதார ரீதியாக பாதுகாத்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் நடைமுறையில் உள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக முறைமையை முற்றாக மாற்றியமைக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுடன் நட்பை ஏற்படுத்தி, சரியான தூரநோக்குடன் செயற்பட்டால், இரண்டு ஆண்டுகளுக்குள் தற்போதைய பிரச்சினையை தீர்க்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இளம் தொழில் சார் நிபுணர்கள் சிலருடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே முன்னாள் பிரதமர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது 25 மில்லியன் டொலர்களுக்கும் குறைவான அந்நிய செலாவணி மாத்திரமே கையிருப்பில் எஞ்சி இருக்கின்றது.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் மேற்கொண்ட வரி குறைப்பு காரணமாக நாட்டுக்கு சுமார் 800 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டது எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 23 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri