நுவரெலியாவில் இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹைபோரெஸ்ட் பிரிவில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இ
ந்த மண்சரிவு அபாயம் காரணமாக நேற்று (30) அந்த பகுதியை சேர்ந்த பலர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி, 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மண்சரிவு அபாயம்
தொடர்ந்து மழை பெய்து வருவதால், குறித்த பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்படுவதால் அங்குள்ள குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட, குழுவினருக்கு தேவையான உணவை, பேரிடர் நிவாரண சேவைகள் மையம் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பேரிடர் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் மோசமான காலநிலை நிலவுவதால் , ஹங்குரான்கெத்த மற்றும் வலப்பனை பகுதிகளில் பல வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam