சுவிற்சர்லாந்தில் நிலச்சரிவில் சிக்கி மூவர் மாயம் : மீட்பு பணிகள் தீவிரம்
சுவிற்சர்லாந்தின்(Switzerland) தென்கிழக்குப் பகுதியில் பெரும் மின்னல் மற்றும் மழைப்பொழிவு காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மிசோக்ஸ் பள்ளத்தாக்கில் இன்று(22) ஏற்பட்ட குறித்த நிலச்சரிவில் சிக்கிய பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதோடு மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
அகழ்வாராய்ச்சி கருவிகள்
இந்நிலையில் காணாமல் போனோரை மீட்கும் நடவடிக்கையினை மீட்புக்குழுவினர் அகழ்வாராய்ச்சி கருவிகளையும், சிறப்பாகப் பயிற்சி பெற்ற தேடுதல் நாய்களையும் கொண்டு முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது மீட்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கும் சுவிஸ் பொலிஸ் அதிகாரி வில்லியம் குளோட்டர், காணாமல் போன மூன்று பேரையும் உயிருடன் கண்டுபிடிப்பதற்கான நம்பிக்கை இருப்பதாக உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், லோஸ்டல்லோ(Lostallo) நகராட்சியில் உள்ள வீடுகளை பாறை சரிவு தாக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
