கொட்டகலை பகுதியில் மண்சரிவு: வீடுகள் சேதம்(Photos)
மழை காரணமாக, கொட்டகலை தகரமலை பிரிவிற்குட்பட்ட ஸ்டோனிகிளிப் தோட்ட நெடுங்குடியிருப்பில் உள்ள மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம்(04) நடைபெற்றுள்ளது.
இதன்போது மூன்று வீடுகளில் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், சமையலறையிலிருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியுள்ளன. அத்துடன் குடியிருப்பு பகுதிகளில் வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை 10ம் திகதி வரையில் நீடிக்கும் சாத்தியம் |
பாதிப்புக்கள்
அதிக மழைவீழ்ச்சி காரணமாக, வீட்டுக்குள் நீர் வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களை சேர்ந்த 16 பேரும் தற்போது தத்தமது வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.
அச்சநிலையில் மக்கள்
இதேவேளை, ஏனைய வீடுகளுக்கும் மண்சரிவு அபாயநிலை காணப்படுவதாகவும், இதனால் தாம் அச்சநிலையோடு இருப்பதாகவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதற்கு தீர்வு பெற்றுதர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பத்தனை சந்தி பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் அவ்விடத்தில் ஒரு வழி போக்குவரத்து மாத்திரமே இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக மலையகத்தில் பல பகுதிகளுக்கு கடும் காற்றுடன் தொடர் மழை பெய்து
வருவதனாலும், தொடர்மலை பகுதிகளில் காணப்படும் பல வீதிகளில் மண்சரிவு அபாயம்
காணப்படுவதனாலும் வாகன சாரதிகள் அவதானமாக தமது வாகனங்களை செலுத்துமாறு
போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.