சஜித் ஆட்சியில் காணி உரிமை மற்றும் வீட்டுத்திட்டம் உறுதி: பழனி திகாம்பரம் தெரிவிப்பு
மலையக மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் சஜித் ஆட்சியில் நாம் நிச்சயம் பெறுவோம். காணி உரிமை மற்றும் வீட்டுத்திட்டம் என்பன நிறைவு செய்யப்படும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, நுவரெலியா - தலவாக்கலையில் 08.09.2024 அன்று மதியம் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
இதில் உரையாற்றும் போதே திகாம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

“ எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலே நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகின்ற தேர்தலாகும்.
சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகிய மூவரும் பிரதான வேட்பாளர்களாக உள்ளனர். இவர்களில் நாம் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றோம்.
சஜித் பிரேமதாச என்பவர் நேர்மையான தலைவர். அவர் மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றக்கூடியவர். சஜித் ஆட்சியில் நாம் நிச்சயம் அமைச்சராவோம். எமது மக்களுக்கு தேவையான உரிமை மற்றும் அபிவிருத்திகளை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம்.

நான் மடக்கும்புர தோட்டத்தில் பிறந்த ஒரு தோட்டத் தொழிலாளியின் பிள்ளை. எனவே, எமது மக்களின் கஷ்டம் எமக்கு தெரியும். சஜித் ஆட்சியில் குறுகிய காலப்பகுதிக்குள் மலையக வீட்டுத் திட்டம் நிறைவுசெய்யப்படும்.
சஜித் ஆட்சிக்கு வந்தால் எமக்கு காணி தருவார் . எனவே, 2 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளால் நுவரெலியா மாவட்டத்தில் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறவைப்போம்.
சஜித் இனவாதமற்ற, மதவாதமற்ற தலைவர். அவர் ஜனாதிபதியானால் அனைவருக்கும் சேவைகளை செய்வார். ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாடம் புகட்டுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டதால் ஏற்பட்ட அபாய நிலை! 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri