மகாவலி வலயம் என்ற பெயரில் வடக்கில் நில அபகரிப்பு! ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள்

Mullaitivu Ranil Wickremesinghe President of Sri lanka Northern Province of Sri Lanka Charles Nirmalanathan
By Rakesh Oct 06, 2022 02:52 AM GMT
Report

மகாவலி வலயம் என்ற பெயரில் வடக்கில் நிலங்களைத் தந்திரமாக அபகரிக்கும் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (05.10.2022) நடைபெற்ற நிலையியல் கட்டளைகள் திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டக் கல்லூரி மாணவர்களின் பரீட்சையின் போது ஏற்கனவே தமிழ், சிங்கள மொழிகளில் மாணவர்கள் தோற்றுவதற்கு வாய்ப்புகள் இருந்த போதும், இப்போது அது ஆங்கில மொழி மூலம் மாத்திரம் பரீட்சை எழுதும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் நீதி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதம நீதியரசருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், அதன்படி முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

கோட்டாபய கடற்படை முகாம் காணி

இதேவேளை, முல்லைத்தீவில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரதேசத்துக்குரிய கோட்டாபய கடற்படை முகாம் காணி தொடர்பில் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. அந்த முகாம் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உருவாக்கப்பட்டது.

அரச, தனியார் காணிகள் அடங்கலாக 671 ஏக்கர் நிலத்தை அங்கே கடற்படை தம் வசம் வைத்துள்ளது. அங்கு தனியார் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்த போதும், அதற்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.

மகாவலி வலயம் என்ற பெயரில் வடக்கில் நில அபகரிப்பு! ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள் | Land Grabbing In The North Charles Nirmalanathan

அங்கு மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் போராட்டங்களால் அங்கு நில அளவை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்ட போதும், கொழும்பில் இருந்து செல்லும் அதிகாரிகளைக் கொண்டு அந்தக் காணிகளை அளந்து கையகப்படுத்த முயற்சிக்கப்படுகின்றது.

இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

மகாவலியுடன் இணைக்கும் முயற்சி

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 6 கிராம அலுவல்கள் பிரிவுகளை மீண்டும் மகாவலியுடன் இணைக்கும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

மகாவலி வலயம் என்ற பெயரில் வடக்கில் நில அபகரிப்பு! ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள் | Land Grabbing In The North Charles Nirmalanathan

முன்னர் அமைச்சராக இருந்த சமல் ராஜபக்‌சவுக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைய அந்த நடவடிக்கைகளை அவர் இடைநிறுத்தியிருந்தார்.

ஆனால், மீண்டும் அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றம் தெரிவு செய்த பின்னர், எங்கள் கட்சியினர் அவரைச் சந்தித்த போது அரசியல் கைதிகளின் விடுதலை, மகாவலி வலய விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கூறியிருந்தேன்.

அப்போது தனது செயலாளருக்கு அது தொடர்பான அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால், எதிர்வரும் நாட்களில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த பகுதிகளை மகாவலியுடன் இணைக்க முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கில் நிலங்களை தந்திரமாக அபகரிக்கும் செயற்பாடுகள்

மகாவலி வலயம் என்ற பெயரில் வடக்கில் நில அபகரிப்பு! ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள் | Land Grabbing In The North Charles Nirmalanathan

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை, ஸ்தீரமற்ற அரசாங்கம் போன்ற நெருக்கடி நிலைமைகள் இருக்கையில் வடக்கில் நிலங்களை தந்திரமாக அபகரிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இதனால் மகாவலி எல் வலயம் தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு ஜனாதிபதியும், அவரின் செயலாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், அங்கு பூர்வீகமாக உள்ள மக்களுக்கு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US