குருந்தூர்மலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு (photos)

Sri Lankan Tamils Mullaitivu
By Rakesh Jun 23, 2022 04:55 PM GMT
Report

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை, பொலிஸாரின் மேலதிக விளக்கத்துக்காக இம்மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் கடந்த 12ஆம் திகதி 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை அமைப்பதற்கும், அங்கு நீதிமன்றக் கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் விசேட பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன.

இந்நிலையில், குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர், குருந்தூர்மலை தொடர்பில் ஏற்கனவே முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை, கடந்த 16ஆம் திகதி நகர்த்தல் பத்திரம் அணைத்து, நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

பொலிஸாரின் விளக்கம்

குருந்தூர்மலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு (photos) | Kurunthamalai Temple Case Adjourned

வழக்கை ஆராய்ந்த நீதிவான் ரி.சரவணராஜா, குருந்தூர்மலையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில், பொலிஸாரிடம் விளக்கம் கோரி வழக்கை இன்றைய (23) நாளுக்குத் திகதியிட்டிருந்தார்.

அந்தவகையில், இன்று விளக்கமளிப்பதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் உட்பட்டோர் நீதிமன்றிலே முன்னிலையாகி விளக்கமளித்திருந்தனர். அதனடிப்படையில் குருந்தூர்மலையில் விகாரையைக் கட்டிய நபர்கள், அவ்வாறு விகாரையைக் கட்டுவதற்கு அனுமதி பெறுவதற்கு எத்தனித்த ஆவணங்களை மாத்திரம் பொலிஸார் மன்றில் சமர்ப்பித்தனர்.

இதற்குக் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதுடன், ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய கட்டளை மீறப்பட்டுள்ளதைத் தெளிவுபடுத்தினர்.

அந்தவகையில் இது தொடர்பில் மேலதிகமாக அறிக்கையை நீதிமன்றத்துக்கு வழங்க, தமக்கு தவணை வேண்டும் என்று பொலிஸார் நீதிவானிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, பொலிஸார் மீள இது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக, இந்த வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் 30ஆம் திகதிக்குத் திகதியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளில் ஒருவரான எஸ்.தனஞ்சயன் கருத்துத் தெரிவிக்கையில்,

"குருந்தூர்மலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று பொலிஸ் தரப்பு விளக்கத்துக்காகத் திகதியிடப்பட்டிருந்தது. அந்தவகையில் பொலிஸ் தரப்பில் விளக்கமளிப்பதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் உட்பட்ட நபர்கள் மன்றிலே முன்னிலையாகியிருந்தனர்.

குறிப்பாக நீதிமன்றக் கட்டளையை மீறியமைக்காகவே, எம்மால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு இந்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குருந்தூர்மலையில் புதிதாக விகாரை

குருந்தூர்மலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு (photos) | Kurunthamalai Temple Case Adjourned

ஏற்கனவே 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதியன்று வழங்கப்பட்ட கட்டளையிலே சைவமக்கள் குருந்தூர்மலைக்குச் சென்று வழிபடமுடியும் எனவும், அங்கு வேறு எந்தவிதமான கட்டடங்களும் அமைக்கப்படமுடியாது எனவும் நீதிமன்று கட்டளையிட்டிருந்தது.

அவ்வாறு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையை மீறி, குருந்தூர்மலையில் புதிதாக விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த விகாரை சட்ட விரோதமாகவே அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த விகாரையைக் கட்டிய நபர்களைக் கைதுசெய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நாம் நீதிமன்றில் எமது சமர்ப்பணத்தைச் செய்திருந்தோம்.

எனினும், விளக்கமளிப்பதற்காக மன்றிலே முன்னிலையாகியிருந்த பொலிஸார், குருந்தூர்மலையில் விகாரையைக் கட்டிய நபர்கள், அவ்வாறு விகாரையைக் கட்டுவதற்கு அனுமதி பெறுவதற்கு எத்தனித்த ஆவணங்களை மாத்திரம் மன்றிலே சமர்ப்பித்திருந்தனர்.

மேலும், இது தொடர்பிலே முழுமையான விளக்கத்தை நீதிமன்றத்துக்கு வழங்க முடியாத சூழ்நிலை இருப்பதாகத் தெரிவித்ததுடன், மேலதிகமாக இதுதொடர்பில் அறிக்கையை மன்றுக்கு வழங்கத் தமக்குத் தவணை வேண்டும் எனவும் பொலிஸார் கேட்டிருந்தனர்.

பொலிஸாரால் கூறப்பட்ட விடயங்களை, குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் கடுமையாக எதிர்த்தனர். பொலிஸார் மீள பதில் வழங்குவதற்காக, இந்த வழக்கானது இந்த மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது"  என்றார். 

25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US