குளியாப்பிட்டி இளைஞர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் காதலி கைது
குளியாப்பிட்டி இளைஞர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரின் அவருடைய காதலியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வஸ்ஸாவுல்ல இலுக்ஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
படுகொலைக்கு உதவியமை, குற்றச் செயலை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரினால் கைது
குளியாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் திகதி காதலியை பார்க்கச் சென்றிருந்த வேளையில் காணாமல் போயிருந்தார்.

குறித்த இளைஞரின் சடலம் சிலாபம் மாதம்பை பகுதியில் வைத்து மீட்கப்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குறித்த யுவதியின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் ஏற்கனவே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam