கொட்டகலையில் தொடர் லயன் குடியிருப்பில் தீப்பரவல்
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டம், கே.ஓ பிரிவில் 10 வீடுகள் கொண்ட 6ஆம் இலக்க தொடர் லயன் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற இந்த தீப்பரவலில் ஒரு வீடு முற்றாக எரிந்துள்ளதுடன், ஏனைய மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
தீ விபத்திற்கான காரணம்
இந்த நான்கு வீடுகளிலும் இருந்த 22 பேர் தற்காலிகமாக உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீப்பரவல் ஏற்பட்ட போது வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு அயலவர்கள் ஓடி வந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீட்டில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், ஆடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
மேலும், இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகத்தின் ஊடாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீப் பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.




ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
