தனது மகளுடன் ஏவுகணை சோதனைகளை கண்காணித்த கிம் ஜாங் உன்! கொரிய தீபகற்பத்தில் பதற்றம்
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது மகள், போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட மூலோபாய க்ரூஸ் ஏவுகணை சோதனைகளை கண்காணித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா–தென் கொரியா இராணுவ பயிற்சிகளுக்கு பதிலடி கொடுப்போம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ள சூழலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
கிம் ஜாங் உன் வாரிசு
Korean Central News Agency வெளியிட்ட படங்களில், ஒரு மாநாட்டு அறையில் அமர்ந்திருந்த இருவரும், ஒரு திரையில் Choe Hyon என்ற போர்க்கப்பலில் இருந்து ஆயுதங்கள் ஏவப்படும் காட்சிகளை பார்ப்பது காட்டப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை காணொளி மூலம் ஏவுகணை ஏவுதலைக் கவனித்த கிம் ஜோங் உன், “வலுவான மற்றும் நம்பகமான அணு போர்தடுப்பு திறனை தொடர்ந்து பராமரிக்க வேண்டியது அவசியம்” என்று வலியுறுத்தியதாக KCNA தெரிவித்துள்ளது.
அந்த செய்தியில் அவரது மகளின் பெயர் குறிப்பிடப்படவில்லை. சுமார் 13 வயதாகும் அவரது மகள் Kim Ju Ae, 2022 இறுதியில் இருந்து இராணுவ அணிவகுப்புகள் மற்றும் ஆயுத சோதனைகள் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளில் தந்தையுடன் தோன்றிவருகிறார்.
கடந்த மாதம் தென் கொரியாவின் உளவு அமைப்பு, கிம் ஜோங் உன் தனது வாரிசாக அவரை அறிவிக்க நெருக்கமாக உள்ளதாக மதிப்பிட்டிருந்தது.
KCNA தகவலின்படி, ஏவப்பட்ட ஏவுகணைகள் வடகொரியாவின் மேற்கு கடற்கரை அருகிலுள்ள இலக்கு தீவுகளைத் துல்லியமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த ஏவுதல்கள் கடற்படையின் மூலோபாய தாக்குதல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும், படையினரை ஆயுதப் பயன்பாட்டில் பழக்கப்படுத்தவும் நடத்தப்பட்டதாக கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
ஆயுத சோதனை
கடந்த வாரம் Choe Hyon போர்க்கப்பலில் இருந்து இதே போன்ற க்ரூஸ் ஏவுகணை சோதனைகளை கிம் ஜோங் உன் நேரில் கண்காணித்திருந்தார். ஆனால் அந்த நிகழ்வில் அவரது மகள் காணப்படவில்லை. இந்த ஏவுகணை சோதனைகள், அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து நடத்தும் வசந்தகால இராணுவ பயிற்சிகள் தொடங்கிய பின்னர் இடம்பெற்றுள்ளன.

வடகொரியா இந்த பயிற்சிகளை தங்களைத் தாக்குவதற்கான முன்பயிற்சியாகக் கருதுகிறது. இதற்கிடையில், கிம் ஜோங் உனின் சகோதரி மற்றும் மூத்த அதிகாரியான Kim Yo Jong, இந்த இராணுவ பயிற்சிகள் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் வடகொரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்துவதாக எச்சரித்துள்ளார்.
மேலும் வடகொரியா தனது போர் தடுப்பு திறனை எதிரிகளுக்கு “உறுதியுடன் உணர்த்தும்” எனவும் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை தொடங்கிய Freedom Shield என்ற 11 நாள் இராணுவ பயிற்சி பெரும்பாலும் கணினி மூலம் ஒத்திகை செய்யப்படும் கட்டளை நிலைய பயிற்சியாகும்.
அத்தோடு வெளிப்புற பயிற்சிகளும் நடைபெறுகின்றன. இத்தகைய பயிற்சிகளுக்கு பதிலாக வடகொரியா அடிக்கடி தனது ஆயுத சோதனைகளை நடத்துவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
தெஹ்ரான் இதுவரை கண்டிராத மிக உக்கிர வான்வழித் தாக்குதல்: தாழ்வாகப் பறந்த போர் வானூர்திகள் - அதிர்ந்த நகரம்
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் தீவிரமடையும் பதற்றம்! சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்
நாட்டின் முக்கிய நகரங்களில் நெருக்கடி! பணிக்கு வராதோருக்கு கடும் எச்சரிக்கை - வெளியான அதிரடி அறிவிப்பு
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam