1956 ஆம் ஆண்டு முதல் இதுவரை 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலை
கடந்த 1956 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக பதவி வகித்த 45 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எஸ்.டப்ளியூ. ஆர்.டி பண்டாரநாயக்க முதல் அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யயப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களுக்கு அமைய 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
1956 ஆ் ஆண்டு முதல் 19 மாதங்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
1980 ஆம் ஆண்டு முதல் எடுத்துக்கொண்டால், வருடத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வீதத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள சம்பந்தமான இரங்கலை வெளியிட்டு உரையாற்றும் போதே அழகப்பெரும இதனை கூறியுள்ளார்.