மட்டக்களப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட பல முக்கிய கோரிக்கைகள்
மயிலத்தமடு–மாதவணை மேய்ச்சல் தரை காணிகளை விரவில் விடுவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் அன்னம் அதில் தாமதம் நிலவுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று(31.07.2026) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மயிலத்தமடு – மாதவணை மேய்ச்சல் தரை
இந்த நிகழ்வானது கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் கருத்து தெரிவிக்கையில்,

"கடந்த (20.05.2026 ) அன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மயிலத்தமடு–மாதவணை கால்நடை மேய்ச்சல் தரை காணிகளை விடுவிப்பது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியால் உறுதியளிக்கப்பட்டது. எனினும், இந்த விடயத்தில் தற்போது நிலவும் தாமதத்திற்கான காரணம் என்ன?
உறுகாமம் – கித்துள் பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இறங்குதுறை பிரச்சினைகளை நேரில் கள ஆய்வு செய்ததன் அடிப்படையில், நான் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தி இருந்தேன், இதற்கு வெகு விரைவில் சுமூகமான முறையில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
கோறளைப்பற்று - தெற்கு கிரான் பாலப் புனரமைப்பு மற்றும் கிரான் - பொண்டுகல்சேனை வீதி அபிவிருத்தியில் நிலவும் தாமதங்களைத் தவிர்த்து, பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
யானை - மனித மோதல்
ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவில் மயிலவட்டவான் ஆற்றுப் பகுதியில் புதிய பாலம் அமைக்க வேண்டியது அவசியம். மட்டக்களப்பு சிறைச்சாலைக்காக புதிய மாற்றுக் காணியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட வேண்டும்.
யானை - மனித மோதலைக் கட்டுப்படுத்தும் வகையில், சேதமடைந்த யானை வேலிகளைப் புனரமைப்பதுடன் புதிய யானை வேலிகளையும் அமைக்க வேண்டும்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கழுவன்கேணி பகுதியில் புதிய துறைமுகம் ஒன்றை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது?
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக அறுவடை இடம்பெறும் நிலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவு செய்வதில் தாமதம் நிலவுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட ரீதியில் ஒருங்கிணைப்புக் கூட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்துவதன் அவசியம் என சுட்டிக்காட்டியள்ளார்.
இலங்கை வரலாற்றை புரட்டிப் போட்ட நீதிமன்ற தீர்ப்பு..! ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நடந்த அதிரடி திருப்பம்
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam