மண்ணெண்ணெய் பிரச்சினைக்கு இந்த வார இறுதியில் தீர்வு! டக்ளஸ் தகவல்

Douglas Devananda Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis
By Erimalai Aug 17, 2022 10:23 AM GMT
Report

கடற்தொழிலாளர் எதிர்கொள்ளும் மண்ணெண்ணெய் பிரச்சினைக்கு இந்தவார இறுதியிலிருந்து தீர்வு கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

மண்ணெண்ணெய் பிரச்சினைக்கான தீர்வு

மக்கள் ஏற்கனவே பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், இந்த நிலையில் அவர்கள் கடல்சார் உணவினை பெற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு அவற்றின் விலை அதிகரித்து காணப்படுவது தொடர்பில் அமைச்சரிடம் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. 

மண்ணெண்ணெய் பிரச்சினைக்கு இந்த வார இறுதியில் தீர்வு! டக்ளஸ் தகவல் | Kerosene Issue This Weekend Information Douglas

இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், “இந்த பிரச்சினை இருப்பது உண்மைதான். இந்த நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதால் எமது மக்கள் அதிகளவான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள்.

அதற்கு தீர்வு காணும் வகையில் எரிபொருள் தாராளமாக கிடைப்பதற்கான ஏற்பாடுகளும், முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கடற்தொழிலாளர்களை பொறுத்தவரையில், சிறு கடற்தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் தட்டுப்பாடாக இருக்கின்றது.

இதேவேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் மசகு எண்ணையை வடித்து மண்ணெண்ணெய்யாக விநியோகிப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார். 

நன்னீர் மீன்பிடி  அபிவிருத்தி நடவடிக்கை

மண்ணெண்ணெய் பிரச்சினைக்கு இந்த வார இறுதியில் தீர்வு! டக்ளஸ் தகவல் | Kerosene Issue This Weekend Information Douglas

இதேவேளை நன்னீர் மீன்பிடியை அதிகரிப்பதற்கான முயற்சி மத்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்,

நன்னீர் மீன்பிடியை அதிகரிப்பதற்கான முயற்சியை நாடளாவிய ரீதியில் நாங்கள் கொண்டு வருகின்றோம். கிளிநொச்சி மாவட்டத்தில் முறிப்பு எனும் இடத்தில் 30 சிறு குளங்கள் உள்ளன, அதில் 5 குளங்களை புதுப்பித்திருக்கின்றோம்.

குறித்த இடத்தினை நாளைய தினம் பார்வையிட்டு அதனை புனரமைப்பு செய்து விரைவில் இயக்க முயற்சிக்கின்றோம்.

இதேவேளை, ஏனைய குளங்கள், வாவிகள் என எல்லாவற்றிலும் நாங்கள் மீன்குஞ்சுகளையும், இரால் குஞ்சுகளையும் விடுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US