மன்னாரில் பல கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மீட்பு
முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் இருந்து பல கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (3) காலை இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டு முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விசேட தேடுதல் நடவடிக்கை
மன்னார் பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முருங்கன் பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் இணைந்து மன்னார் - நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 25 மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட 398 சிறிய பொதிகளைக் கொண்ட கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட கேரள கஞ்சா 906 கிலோகிராம் எடை கொண்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை மன்னார் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜய சேகர முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு இன்று புதன்கிழமை (3) காலை விஜயம் செய்து மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளை பார்வையிட்டதோடு,பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் கலந்துரையாடியுள்ளார்.









நடிகர் பிரபு தேவாவின் பிரம்மாண்ட வீட்டை நீங்கள் பார்த்து இருக்கீங்களா.. புகைப்படங்கள் இதோ Cineulagam
