பொதுஜன பெரமுனவினரை ஆட்டிப் படைக்கும் கர்மவினை....! விமல் வீரவன்ச சாடல்
நாமல் ராஜபக்ச உள்ளிட்ட மொட்டுக் கட்சியினர் கர்மவினையை அனுபவித்து வருகின்றனர் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கூட்டணி கலாசாரம் பற்றி தற்போது கதைக்கும் அவர்கள் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் அதனை மறந்தே செயற்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கூட்டணியாகச் செயற்படும் போது பங்காளிக் கட்சிகளினதும் ஆலோசனையைப் பெற்று, அதற்கமைய செயற்படுமாறு ஜனாதிபதிக்கு நாமல் ராஜபக்ச அறிவுரை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
ஆனால், கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் கூட்டணி அரசியல் கலாசாரம் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருந்தால் அந்த ஆட்சி தான் இன்றும் நீடித்திருக்கும்.
நாமலின் கருத்தைக் கேட்கும் போது சிரிப்புத் தான் வந்தது. அதுதான் கர்மவினை. அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை எப்படியாவது ஒத்தி வைத்து ஆட்சியை தக்கவைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிக்கின்றார்.
அதற்காக சலுகை அறிவிப்புகள் வெளிவருகின்றன. இப்படியான தற்காலிக நடவடிக்கைகளால் தான் நாடு நாசமானது.
எனவே, புதிய அரசியல் பயணத்துக்கு மக்கள் தயாராக வேண்டும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
