கடுகண்ணாவ மண்சரிவு! பலி எண்ணிக்கையில் அதிகரிப்பு..
புதிய இணைப்பு
கடுகண்ணாவ, கணேதென்ன பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய மேலும் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது வரை ஆறு பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாம் இணைப்பு
பஹல கடுகண்ணாவ, கணேதென்ன பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய மேலும் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நான்கு பேர் மாவனெல்ல அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
கடுகண்ணாவ பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்த பகுதியில் இடிபாடுகளுக்குள் இருந்து ஆணொருவர் மீட்கப்பட்டு மருத்துவனைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
முன்னதாக குறித்த சம்பவத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்தநிலையில், பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

கண்டியின் பஹல கடுகண்ணாவ அருகே உள்ள ஹிங்குல கணேதென்ன பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இடிபாடுகளுக்குள் சிக்கிய மற்றொரு பெண்ணை மீட்புக் குழுக்கள் தற்போது மீட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
பாதுகாப்புப் படையினரும் உள்ளூர்வாசிகளும் ஏற்கனவே அந்த இடத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இந்த அனர்த்தத்தில், அந்த விற்பனை நிலையத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடுகண்ணாவை நிலச்சரிவில் சுமார் 5 பேர் உள்ளே சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
கண்டி - கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக, அந்த வீதி ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, கனேதென்ன பிரதேசத்தில் மலையிலிருந்து பாறைகள் வீழ்ந்துள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட தகவல்கள்
தற்போது நிலவும் ஆபத்தான சூழலைக் கருத்தில் கொண்டு, இவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், இயன்றவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் விற்பனை நிலையத்தில் இருந்த சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், வீதியின் வாகன போக்குவரத்து ஒரு வழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது நிலவும் ஆபத்தான சூழலைக் கருத்தில் கொண்டு, இவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், இயன்றவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.






51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam