டித்வா புயல் அனர்த்தம்: அதிகரித்துள்ள பலி எண்ணிக்கை
இலங்கையில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மேலும் 3 பேரின் மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
நேற்று இற்றைப்படுத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
மாவட்ட அரச அதிபர்களினால் உறுதி செய்யப்பட்ட தரவுகளுக்கு அமைய, கண்டி, வவுனியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று புதுப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் 173 பேர் காணாமல்போயுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 199 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 680 பேர் தொடர்ந்தும் 85 தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 48 ஆயிரத்து 350 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 884 பேர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர் என்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 13 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan