தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு எதிரான விசாரணையில் இருந்து விலகிய நீதியரசர்கள்!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புக்களை வெளியிட தகவல் அறியும் உரிமை ஆணையக உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இருவர் விலகியுள்ளனர்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ருவான் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோரே விசாரணையில் இருந்து விலகியுள்ளனர்.
அத்துடன் புதிய நீதியரசர்கள் குழுவை பெயரிடவும் உத்தரவிட்டனர்.
இந்தநிலையில் அடுத்த விசாரணையை ஜனவரி 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.
ஊடகவியலாளர் சாமர சம்பத், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த பட்டியலை வெளியிடுவதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து உத்தரவு பெற்றுள்ளார்,
எனினும் இதனை எதிர்த்து நாடாளுமன்றம், மேன்முறையீட்டை செய்துள்ளது.
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri