இலங்கை உட்பட ஆறு நாடுகளுக்கான நுழைவு தடையை நீக்கியது ஜப்பான்
கோவிட் பரவலுக்கு மத்தியில், எல்லை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில், ஜப்பான் பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
இதன்படி ஜப்பானில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கோவிட் வைரஸின் டெல்டா மாறுபாடு கறுப்புப்பட்டியலில் உள்ள, ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் திரும்பி வருவதற்கான, அனுமதி வழங்கப்படவுள்ளது.
இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, மாலத்தீவு, நேபாளம் ஆகிய ஆறு நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மற்றும் ஜப்பானில் செல்லுபடியாகும் குடியிருப்பு அந்தஸ்து உள்ளவர்கள, இதன்கீழ் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
கடந்த ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கை ஆறு நாடுகளுக்கு நீக்கப்படும் என்று, ஜப்பான் அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை அறிவித்தது.
வருகையாளர்கள், ஜப்பானுக்குள் நுழைந்த பிறகு, தனிமைப்படுத்தலின் மூன்றாம் நாளில், கோவிட் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்று ஜப்பானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.