யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவகாரம்: ஆளும் தரப்பு வெளியிட்டுள்ள தகவல்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி ஊழியர்கள் தொடங்கிய தொழிற்சங்க நடவடிக்கை குறித்து கல்வி அமைச்சு அறிக்கை கோரியுள்ளது என்று அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
இன்று(28) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கை
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளைத் தொடர அரசாங்கம் விரும்புவதால், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அமைச்சகம் தலையிடவுள்ளது.
கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கும் எந்தவொரு பிரச்சினையையும் நாங்கள் உடனடியாகத் தீர்ப்போம்.
கல்வி நடவடிக்கைகளைத் தடுக்கும் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கு முன்பு அமைச்சகத்துடன் கலந்துரையாடி, பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் மாத்திரம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுங்கள்.
கல்வி, கல்விசாரா ஊழியர்கள் அல்லது மாணவர்களுடன் கலந்துரையாட நாங்கள் தயாராக உள்ளோம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் - திருவிழா





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
