நினைவேந்தலை குழப்பும் திட்டமிட்ட சதி நடவடிக்கைக்கு ஒருபோதும் இடமளியோம்: பொன்மாஸ்டர்

Jaffna
By Kajinthan Sep 20, 2022 07:32 PM GMT
Report

“திடீர் நினைவேந்தல் கட்டமைப்புக்கள் மூலம் தியாக தீபத்தின் நினைவேந்தலை குழப்பும் திட்டமிட்ட சதி நடவடிக்கைக்கு ஒருபோதும் இடமளியோம்” என தியாக திலீபனின் எற்பாட்டுக்குழுவின் தலைவர் முன்னாள் மூத்த போராளி பொன்மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன், இடம்பெற்ற ஊடக சந்திப்பில்  நினைவேந்தல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யாழ்.மாநகரசபை

”இன்று இந்த புனிதமான இடத்தில் தியாக தீபத்தின் நினைவேந்தல் சம்மந்தமாக ஊடக சந்திப்பினை நடத்தும் நிலைக்கு யாழ்.மாநகரசபை எம்மைத் தள்ளியுள்ளது.

ஒரு மெல்லிய நெருப்பிற்குள் நின்றே எமது தியாகச்செம்மல்களின் நினைவேந்தல்களை தற்போதுவரை நடத்திக்கொண்டு வருகின்றோம்.

நினைவேந்தலை குழப்பும் திட்டமிட்ட சதி நடவடிக்கைக்கு ஒருபோதும் இடமளியோம்: பொன்மாஸ்டர் | Jaffna Thiyaki Thileepan Remembrancesl

இன்று ழுழு நெருப்பிற்குள் நின்று எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

தேசியத் தலைவரின் கீழ் விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாகவிருந்து ஒற்றையாட்சியின் கீழான செயற்பாட்டை எதிர்த்து போராடியே தியாகச் செல்வங்கள் மடிந்தன.

அவர்களின் தியாகங்களை சரியாக வழிநடத்த எம்மாலான செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த அடிப்படையில், கடந்த ஆறு வருடங்களாக தியாக தீபத்தின் நினைவேந்தலை நடத்திவரும் நினைவேந்தல் ஏற்பட்டுக்குழுவோடு எந்தவித கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது. தியாக தீபத்தின் நினைவேந்தலை குழப்புவதற்கான திட்டமிட்ட சதி முயற்சியினை யாழ். மாநகர சபை முன்னெடுத்துள்ளது.

ஏற்கனவே செயற்பாட்டிலுள்ள நினைவேந்தல் கட்டமைப்பில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் உறவுகள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்தே தியாக தீபத்தின் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்ய முயற்சி 

நினைவேந்தலை குழப்பும் திட்டமிட்ட சதி நடவடிக்கைக்கு ஒருபோதும் இடமளியோம்: பொன்மாஸ்டர் | Jaffna Thiyaki Thileepan Remembrancesl

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தியாக தீபத்தின் நினைவேந்தலினைக் குழப்பி மக்கள் மயப்படுத்தப்பட்டு வரும் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கச்செய்வதே புதிதாக உருவாக்கப்பட்ட திடீர் நினைவேந்தல் கட்டமைப்புக்களின் நோக்கமாகும்.

நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவால் நினைவேந்தல் ஆரம்பித்து ஐந்து நாட்கள் கடந்த நிலையில் இன்று புதிதாக தோன்றும் திடீர் நினைவேந்தல் கட்டமைப்புக்கள் எமது போராட்டத்தின் தியாகங்களுக்கு செய்யும் துரோக நடவடிக்கையாகும்.

விடுதலை உணர்வுகள் மக்கள் மத்தியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்ற சதித்திட்டத்தினை இந்த கட்டமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன.

மேலும், கடந்த வெள்ளியன்று மாநகரசபை முதல்வரினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த திடீர் நினைவேந்தல் கட்டமைப்பிற்கான கூட்டத்தில் பங்குபற்றியிருந்த முன்னாள் போராளி செழியன், தியாக தீபத்தின் நினைவேந்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியையும் இராணுவத்தினரையும் கூட இணைத்துக்கொள்வோம் என்றவொரு கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அந்தவேளையில் அங்கு கூடியிருந்த ஒரு முன்னாள் போராளியைத்தவிர வேறு எவருமே அவருடைய கருத்திற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை.

ஆனால் அந்த போராளியைத் தவிர்த்தே ஏழு பேர் கொண்ட கட்டமைப்பானது உருவாக்கப்பட்டிருந்தது.

இப்படியானவர்கள் தியாக தீபத்தின் நினைவேந்தலை பொறுப்பெடுப்பதென்பது நினைவேந்தலின் புனிதத்தன்மையினை மாசுபடுத்துவதாகவே அமையும் என்பதனை நான் தெட்டத்தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இதுவரை காலமும் எந்தவொரு குழப்பங்களுமின்றி நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டே வருகின்றது.

அவ்வாறு ஏதும் குழப்பங்கள் இருந்தால் கூட கடந்த வருடம் நினைவேந்தல் நிறைவுற்று ஒரு வருட காலம் இருந்த நிலையில் அதனை ஏற்பாட்டுக்குழுவிற்கு அறியப்படுத்தியிருக்கலாம்.

அவ்வாறு எந்தவொரு நடவடிக்கையினையும் மேற்கொள்ளாது இன்று இந்த திடீர் கட்டமைப்பினை உருவாக்கியிருப்பதென்பது, மக்களைக் குழப்பத்திற்கு உட்படுத்தி, தியாக வரலாறுகளை மழுங்கடிக்கச்செய்யும் திட்டமிட்ட சதியே என்பது புலனாகின்றது.

திடீர் நினைவேந்தல் கட்டமைப்பு

குறித்த திடீர் நினைவேந்தல் கட்டமைப்பில் உள்வாங்கப்பட்ட ஒருவர் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட அரசியல் கைதிகளுடைய போராட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தார்.

எனினும் போராட்டக்காரருக்கு போராட்டத்தின் போதும் போராட்டத்திற்கு பின்னரும் எந்த வழியிலும் அவர்களுக்கான உதவிகளை வழங்காமல் போராட்டத்திற்கே தாமதமாகவே வருகை தந்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் குறித்த உறவுகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுத்ததோட போராட்டத்தில் நாமும் பங்கெடுத்திருந்தோம்.

இவ்வாறாக மக்களை அழைத்து நடுவீதியில் விட்டுச்சென்றவரால் எவ்வாறு இந்த நினைவேந்தலை நேர்த்தியாகச் செய்து விட முடியும். மேலும், குறித்த இந்த திடீர் கட்டமைப்பினைச் சார்ந்தவர்கள், தாயகத்தில் எமது மக்கள் சார்ந்து செயற்படுத்த வேண்டிய ஏராளமான விடயங்கள் காணப்படுகின்றது.

அவற்றில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என நான் அவர்களுக்கு கூறிக்கொள்கின்றேன். தியாக தீபத்தின் ஐந்து அம்சக்கோரிக்கைகளுள் ஒன்றான நிலஆக்கிரமிப்பு குருந்தூர் மலையில் சிங்கள பேரினவாதத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நினைவேந்தலை குழப்பும் திட்டமிட்ட சதி நடவடிக்கைக்கு ஒருபோதும் இடமளியோம்: பொன்மாஸ்டர் | Jaffna Thiyaki Thileepan Remembrancesl

எனவே இங்கு நினைவேந்தலினைக் குழப்பாமல் குருந்தூர் மலைக்குச்சென்று தியாக தீபத்தின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கின்றேன்.

எது எவ்வாறாயினும் வழமை போலவே தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் முன்னெடுக்கப்படும் என்பதோடு அதனைக் குழப்பும் வகையில் எந்த தரப்பு செயற்பட்டாலும் நாம் அவற்றுக்கெதிராக குரல் எழுப்புவோம் ” என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US