கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதல் இடம்பெற்று யாழ்.மாணவன் கௌரவிப்பு
க. பொ.த. உயர்தர பரீட்சையில் 2020 புதிய பாடத்திட்டத்தில் கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதல் இடம்பெற்ற யாழ்.சரசாலை மாணவன் தனராஜ் சுந்தர்பவனையையும், உயிரியல் பிரிவில் அகில இலங்கை ரீதியில் 30 வது இடம்பிடித்த அவரது சகோதரி தனராஜ் தரணிகாவையும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினுடைய ஊடகப்பேச்சாளர் சந்தித்து கெளரவித்துள்ளார்.
இதன்போது அவருடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் மதுசூதன், சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் கஜீதன் ஆகியோர் கலந்து சந்தித்து கெளரவித்துள்ளனர்.
வீழ்ச்சியடைந்த தமிழகத்தின் கல்வியை அகில இலங்கை ரீதியில் முதல் இடம்பெற்று எழுச்சியையும், இனத்துக்கு கெளரவத்தையும் பெற்றுத் தந்தவர்கள் தொடர்ந்தும் சாதனைகளை நிலைநாட்ட வாழ்த்தியுள்ளார்.