யாழ்.போதனா வைத்தியசாலையில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் வெளியிட்ட தகவல்
யாழ். போதனா வைத்தியசாலையில் வீசப்பட்டிருந்த கரு பெண் ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதன் காரணமாக வீசப்பட்டிருக்கலாம் என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் 22 ஆம் இலக்க விடுதிக்கு அருகாமையில் வீசப்பட்டிருந்த கரு தொடர்பில் ஊடகங்களிடம் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கருச்சிதைவு
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த பெண் ஒருவர் கருச்சிதைவு ஏற்பட்ட
நிலையில் அதனை போதனா வைத்தியசாலையின் பாவனையற்ற மலசலகூடத்தொகுதியில் வீசி
இருக்கலாம் என நம்புகின்றோம்.
இந்நிலையில் மீட்கப்பட்ட கரு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரிடமும் குறித்த விடயம் தொடர்பில்
தெரிவித்துள்ளோம். அத்துடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ஜீ தமிழ் சரி கம பா நடுவர் கார்த்திக்கின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam

மேகன் உடனான திருமண உறவில் ஹரி நீடிக்க காரணம் இது தான்: அரச குடும்ப சேவகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

23 வயது நடிகையை காதலிக்கும் ஷாலினி அஜித்தின் சகோதரர் ரிச்சர்ட்! வைரலாகும் ஜோடியின் போட்டோ Cineulagam
