யாழ்.போதனா வைத்தியசாலையில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் வெளியிட்ட தகவல்
யாழ். போதனா வைத்தியசாலையில் வீசப்பட்டிருந்த கரு பெண் ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதன் காரணமாக வீசப்பட்டிருக்கலாம் என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் 22 ஆம் இலக்க விடுதிக்கு அருகாமையில் வீசப்பட்டிருந்த கரு தொடர்பில் ஊடகங்களிடம் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கருச்சிதைவு

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த பெண் ஒருவர் கருச்சிதைவு ஏற்பட்ட
நிலையில் அதனை போதனா வைத்தியசாலையின் பாவனையற்ற மலசலகூடத்தொகுதியில் வீசி
இருக்கலாம் என நம்புகின்றோம்.
இந்நிலையில் மீட்கப்பட்ட கரு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரிடமும் குறித்த விடயம் தொடர்பில்
தெரிவித்துள்ளோம். அத்துடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam