யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்
யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உடுப்பிட்டி பகுதியில் வீடு ஒன்றில் கம்பி ஒன்றினை பயன்படுத்தி சிற்ப வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை, அந்த கம்பி பிரதான மின் இணைப்பு கேபிளுடன் தற்செயலாகப்பட்டு மின்சாரம் தாக்கியுள்ளது.
இதன் காரணமாக தூக்கி வீசப்பட்ட குறித்த இளைஞனை வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 27 வயதுடைய நிலக்காடு - காரைநகரை சேர்ந்த குமாரசாமி சுதன் எனும் ஒரு குழந்தையின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

குடும்பத்துடன் குதூகளிக்கும் கோபி...! ராதிகா பேரைக் கேட்டு அலறி அடித்து ஓட்டம்! சூடு பிடிக்கும் காட்சி Manithan

ஐபிஎல் இறுதிப்போட்டி மாற்றம்... பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள் News Lankasri

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! நிரூபர்களுக்கு அளித்த நக்கலான பதிலால் சர்ச்சை Manithan

ஜீ தமிழ் சரி கம பா நடுவர் கார்த்திக்கின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam
