யாழ். போதனா வைத்தியசாலையில் மூன்று மாதங்களுக்கு உட்பட்ட கருவின் சடலம் மீட்பு!
யாழ். போதனா வைத்தியசாலையின் கர்ப்பிணிகளுக்கான விடுதியில் இருந்து வீசப்பட்ட மூன்று மாதங்களுக்கு உட்பட்ட கருவின் சடலம் நேற்று மதியம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன்காரணமாக வைத்தியசாலையில் பாரிய குழப்பம் நிலவியதுடன் எவ்வாறு இந்த கரு வந்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டிருந்தது.
மூன்று மாதங்களுக்கு உட்பட்ட கரு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 22ஆம் இலக்க கர்ப்பிணிகளுக்கான விடுதியில் இருந்து வீசப்பட்ட கரு 10 ஆம் இலக்க விடுதியில் உள்ள நீர்குழாயில் உள்ள வெடிப்பு காரணமாக வெளியேறியுள்ளது.

மூன்று மாதங்களுக்குட்பட்ட கர்ப்பிணியின் கலைக்கப்பட்ட கருவாக இது இருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருவதுடன் யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரும் தனியான விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக
தெரியவருகிறது.
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கண்ணே கலைமானே சீரியல் நடிகை... எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா? Cineulagam
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan