யாழில் தொழில் திணைக்களத்தின் விசேட கண்காட்சி: மக்களுக்கு கிடைக்க பெறவுள்ள சேவைகள்
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் Glocal Fair கண்காட்சியானது யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த கண்காட்சியானது எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் நடைபெறவுள்ளது.
இதில் தொழில் அமைச்சின் கீழான சகல திணைக்களங்கள், ஊழியர் நம்பிக்கை நிதியம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் மத்தியவங்கி என்பவற்றின் சேவைகளை ஒரே இடத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் நிவேதிகா கேதீசன் தெரிவித்துள்ளார்.
வழங்கப்படவுள்ள சேவைகள்
இதற்கமைய தொழில் திணைக்களத்தினால் ஊ.சே.நிதி தொடர்பாக விசேட கவனம் செலுத்துவதுடன்
கீழ்க்காணும் சேவைகள் வழங்குவதற்கும் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1. ஊ.சே.நிதி பதிவுகளை பரிசீலித்தல் 2. ஊ.சே.நிதி பதிவு செய்யாத உறுப்பினர்களை பதிவு செய்தல். 3. விரலடையாளங்களை பதிவு செய்தல் 4. பெயர் மற்றும் பதிவுகளில் தவறுகள் காணப்படின் திருத்தம் செய்தல் 5. ஆலோசனை சேவைகள் ஊ.சே நிதி தொடர்பான தகவல்கள் பரிசீலித்தல் போன்ற சேவைகள் வழங்கப்படவுள்ளன.
குறித்த நிகழ்ச்சி திட்டத்திற்கு வருகை தருவோர் அடையாளத்தை உறுதிப்படுத்த தே.அ.அட்டை/ B படிவத்தை எடுத்து வருதல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெயரில் திருத்தங்களை மேற்கொள்ள வருகை தருவோர் தமது தொழில் தருநரின் உறுதிப்படுத்தலுடனான கடிதங்களை எடுத்து வருதல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊழியர்கள் சேமலாப நிதியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளீர்களா என்பதை காலதாமதமின்றி தங்கள் நிறுவனத்தில் அல்லது மாவட்டத் தொழில் அலுவலகத்தில் பரிசீலித்து பதிவு செய்யப்படவில்லையாயின் மேற் குறித்த ஆவணங்களுடன் வருகை தருவது இலகுவாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |