யாழ். கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழி்ல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மொத்த சனத்தொகையில் 25 வீதமான மக்கள் கடற்றொழிலை மேற்கொள்ளும் மக்களாக காணப்படுகின்றனர்.
எனவே குறித்த விடயம் தொடர்பாக பல்வேறு தரப்புகள் ஊடாக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
கடற்றொழிலில் ஈடுபடல்
இதன்போது இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினை, சட்டவிரோத முறைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடல், தென்னிலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகள், கடற்றொழில் இறங்கு துறைகளை புணரமைத்தல், மயிலிட்டி பருத்திதுறை துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் பிரதிநிதிகளின் கருத்துக்கள் பெறப்பட்டு கலந்துரையாடப்பட்டன.
கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட உதவி பணிப்பாளர் சுதாகரன், அமைச்சின் செயலாளர் , பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
