கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொம்மைகளுடன் சிக்கிய வெளிநாட்டவர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொம்மைகளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் 10 கிலோ 323 கிராம் கோக்கெயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர் மூன்று டெடி பியர் பொம்மைகளுக்குள் மறைத்து போதைப்பொருட்களைக் கொண்டு வந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் இன்று காலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய கூட்டுச் சோதனையில் குறித்த போதை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள்
விமானம் மூலம் நாட்டிற்கு போதைப்பொருட்களை கொண்டு வந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதுடைய இத்தாலிய நாட்டவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan