போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவரின் 10 கோடி ரூபா சொத்து முடக்கம்
போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர் ஒருவரின் பத்து கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முடக்கியுள்ளனர்.
எம்பிலிட்டிய ஜயசிங்க ஆராச்சிகே ஹேமந்த என்ற சந்தேக நபரின் சொத்துக்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதமான முறையில் பாரியளவில் போதைப் பொருள் விற்பனை செய்து அதன் ஊடாக பாரியளவு பணம் சம்பாபித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எம்பிலிபிட்டி நகரில் இயங்கி வந்த வர்த்கத நிலையமொன்று, 39.5 பர்ச் காணி மற்றும் வர்த்தக நிலையமொன்று இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் இந்த சொத்துக்களை தனது மனைவியின் பெயரில் கொள்வனவு செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
நிதிச்சலவையாக்கல் சட்டத்தின் கீழ் குறித்த நபரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.





வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri
