ராஜபக்சர்களின் தங்க கழிப்பறைகள்! அநுரவின் கருத்துக்களை சாடும் மொட்டுத்தரப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களிடம் தங்க கழிப்பறைகள் மற்றும் தங்க குதிரைகள் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சாகர காரியவசம்,
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு அந்தப் பொய்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை.இது நாளுக்கு நாள் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
எதையும் திருடாத மகிந்த
ஜனாதிபதி தன்னிடம் இருந்ததாக கூறும் கோப்புக் கட்டை யாராவது திருடிவிட்டார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறார்.
அநுரகுமார தான் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஏழு மாதங்களுக்கும் மேலாகியும், சுமத்தப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டு குறித்தும் எந்த விசாரணை தொடங்கப்படவில்லை.
சீனாவிலிருந்து மகிந்த ராஜபக்சவுக்கு பணம் வழங்கப்பட்ட கணக்கு எண்கள் கூட ஜனாதிபதி அனுர குமாரவிடம் இருப்பதாகக் கூறிய அவர், அந்தக் கணக்கு எண்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், இந்த நாட்டை போரிலிருந்து காப்பாற்றிய, எதையும் திருடாத முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று சாகர காரியவசம் மேலும் கூறியுள்ளார்.

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 23 மணி நேரம் முன்

அமெரிக்காவை உதறிவிட்டு பிரான்சுடன் கைகோர்க்க இந்தியா திட்டம்- Tejas Mk-2 விமானத்திற்காக எஞ்சின் தாமதம் News Lankasri

Chanakya Niti: இந்த நான்கு பெண்களை தாய்க்கு நிகராக மதிக்க வேண்டுமாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
