இஸ்ரேலுக்குள் நுழைய ஐ.நா பொதுச் செயலாளருக்கு தடை
இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மண்ணில் ஐ.நா. பொதுச்செயலாளர் காலடி எடுத்து வைக்க தகுதியற்றவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றின் ஒரு கறையாக கருதப்படுவார்
மேலும், இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்தன. இதனைச் செய்யாமல் மௌனம் காக்கும் எவருக்கும் இஸ்ரேல் மண்ணில் கால் வைக்கத் தகுதி கிடையாது என்றும் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி மற்றும் தற்போது ஈரானின் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் அன்டோனியோ குட்டரெஸ் இஸ்ரேல் வரலாற்றின் ஒரு கறையாக கருதப்படுவார் எனவும் இஸ்ரேல் காட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan