24 மணி நேரத்தில் குறிவைத்து அழிக்கப்பட்ட ஈரானின் முக்கிய இலக்குகள் - சுட்டுவீழ்த்தப்பட்ட விமானங்கள்
கடந்த 24 மணி நேரத்தில் மத்திய மற்றும் மேற்கு ஈரானில் 120 க்கும் மேற்பட்ட இலக்குகளை இஸ்ரேலிய இராணுவம் வெற்றிகரமாக தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
(X) சமூக ஊடகத்தளத்தில் சிறப்பு அறிக்கையை வெளியிட்ட இஸ்ரேலிய விமானப்படை,ஈரானிய ஆட்சிக்குச் சொந்தமான பல மையங்கள் தாக்கப்பட்டதாக கூறியுள்ளது.
போர்க்களத்தில் களமிறக்கப்படும் அதி சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு! ஈரானின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்
அழிக்கப்பட்ட இலக்குகள்
குறிப்பாக, ஈரானிய புரட்சிகர காவலர் படைக்குச் சொந்தமான பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV) சேமித்து வைக்கும் இடங்கள் மற்றும் அவற்றை இயக்கும் மையங்கள், அத்துடன் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றைக் குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், இந்தத் தாக்குதல்கள் மற்றும் அழிக்கப்பட்ட இலக்குகள் குறித்து உறுதியான ஆதாரங்களை வழங்க இஸ்ரேலிய இராணுவம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam