இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் முறைக்கேடுகள்

South Eastern University of Sri Lanka Sri Lanka Education
By Kamal Apr 09, 2024 08:34 PM GMT
Report

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைக்கேடுகள் இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்கள், உள்நாட்டு வெளிநாட்டு கல்வியலாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

துணைவேந்தரின் கல்விசார் மற்றும் நிர்வாக சார் முறைகேடுகள் தொடர்பில் பல்வேறு தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் இலங்கை பெண்ணுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

ஜேர்மனியில் இலங்கை பெண்ணுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

ஆய்வு சார்ந்த மோசடிகள்

மேலும், அவரது முறைகேடுகள் தொடர்பில் நாட்டின் நாடாளுமன்றத்திலும் ஜனாதிபதி செயலகத்திலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் துணை வேந்தரை பதிலீடு செய்வதற்கு கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, கல்வி அமைச்சும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் இந்த விவகாரம் தொடர்பிலான நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

துணைவேந்தரை பணி நீக்குவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் சந்தர்ப்பத்தில் துணைவேந்தர், மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

கல்வி அமைச்சர், ராஜாங்க உயர்கல்வி அமைச்சர், கல்வி அமைச்சரின் செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் ஏனைய சில தரப்பினருக்கு எதிராக அவர் முறைப்பாடு செய்திருந்தார்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் முறைக்கேடுகள் | Irregularities In South Eastern University Of Sl  

இந்த பல்கலைக்கழக துணைவேந்தரின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவிற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பெற்றுக் கொண்டார்.

துணைவேந்தரின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகின்றது. துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினால் இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கடந்த பெப்ரவரி மாதம் 08ஆம் திகதி இது தொடர்பிலான விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதைவேளை, துணைவேந்தருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்னமும் விசாரணைக்கு உட்படுத்தி முடிக்கப்படவில்லை.

தற்போதைய துணைவேந்தரின் பேராசிரியர் பதவி தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதுடன் அது தொடர்பிலும் சவால் விடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பதவியினை பெற்றுக் கொள்வதிலும் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சமூகவியல் மற்றும் கலை, கலாச்சார பீடங்களின் பீடாதிபதிகளுக்கு இந்த மோசடி தொடர்பான தகவல்கள் தெரியும்.

துணைவேந்தருக்கு எதிராக பல்வேறு இடங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், இதுவரையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

ஏற்கனவே தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இவ்வாறு பேராசிரியர் பதவி தொடர்பிலான மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக இலங்கை ஊடகங்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி உள்ளது.

உரிய ஆய்வுகளை மேற்கொண்டு சரியான முறையில் பேராசிரியர் பதவிகள் வழங்கப்படவில்லை எனவும் போலியான அடிப்படையில் கல்வி சார்ந்த தகுதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆய்வு சார்ந்த மோசடிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பதிவாகியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உரிய தர நிர்ணயங்களை பின்பற்றாது பல்வேறு நபர்களுக்கு பேராசிரியர் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆய்வு கட்டுரைகள்

தற்போதைய துணைவேந்தர் காலத்திலும் இதே விதமாக முறைகேடான அடிப்படையில் பதவி உயர்வுகளும் கல்வி சார்ந்த தகமை உயர்வுகளும் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தரம் குறைந்த வகையில் கல்வி சார்ந்த தகமைகள் வழங்கப்படுவதனால் பொதுமக்களின் பல மில்லியன் ரூபா பணம் விரயமாக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தின் தகவல் தொழில்நுட்ப மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தின் விரிவுரையாளர் ஒருவருக்கு பேராசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சிரேஸ்ட விரிவுரையாளர் பதவியை வகித்து வந்த குறித்த நபர் பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். எனினும் அவர் இதுவரையில் கலாநிதி பட்டம் ஒன்றை பெற்றுக் கொள்ளவில்லை என்பதுடன் அவர் எதுவிதமான கிரமமான ஆய்வுகளையும் செய்ததில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஆய்வு செய்தார் என்ற அடிப்படையில் அவருக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர் இந்த விரிவுரையாளர் பல்வேறு சஞ்சிகைகளில் ஆய்வுகளை சமர்ப்பித்து உள்ளதாக கூறிய போதிலும் பேராசிரியர் தகுதிக்கான ஆய்வு கட்டுரைகளாக அவை அமையவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் முறைக்கேடுகள் | Irregularities In South Eastern University Of Sl

இந்த போலியான ஆய்வுகள் ஆய்வறிக்கைகள் மூலம் பேராசிரியர் பதவியை பெற்றுக்கொண்ட குறித்த நபர் தனது சம்பளத்தை இரண்டு மடங்காக அதிகரித்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மற்றும் ஒரு விரிவுரையாளரும் இவ்வாறு பேராசிரியர் பதவிக்காக கடந்த 2020 ஆம் ஆண்டில் விண்ணப்பம் செய்துள்ளார். 

இவரும் கலாநிதி பட்டம் பெற்றுக் கொள்ளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவ்வாறான நபர்கள் உலக தரத்திலான சஞ்சிகைகள் அல்லது பேராசிரியர்களை அங்கீகரிக்கும் சஞ்சிகைகளில் ஆய்வுகளை பிரசூரிக்க வேண்டும் என்ற காரணத்தினால் சில ஆய்வுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த ஆய்வுகளும் போதிய தரத்தினை பூர்த்தி செய்யவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த விரிவுரையாளரும் ஒரே ஆண்டில் 25 சஞ்சிகைகளில், ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த ஆய்வு கட்டுரைகள் பேராசிரியர் பதவி உயர்விற்கான தகுதிநிலையை கொண்டிருக்கவில்லை என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான துறை பேராசிரியர் ஒருவரும் இதே விதமாக கலாநிதி பட்டம் இன்றி அரசியல் விஞ்ஞான பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

ஒரு ஆண்டு காலத்தில் குறித்த நபர் எழுதிய 25 ஆய்வு கட்டுரைகளின் அடிப்படையில் இவருக்கு அந்த தகுதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கட்டுரைகளின் தகுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கையின் கல்வித்துறை தரத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பல்லைக்கழக கல்வியின் தரம்

கடந்த 2019ஆம் ஆண்டில் இந்த துணைவேந்தர் இவ்வாறு முறைகேடான அடிப்படையில் பேராசிரியர் பதவி உயர்வினை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, அவர் தனது ஆய்வுக்கு பங்களிப்பு வழங்கியவரை பற்றி குறிப்பிட்ட போதிலும் பேராசிரியர் பதவிக்காக விண்ணப்பம் செய்த போது ஆய்வுகளை தான் மட்டுமே தனியாக மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான ஆதாரங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த மூன்று நான்கு ஆண்டுகளில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் 21 பேராசிரியர்களுக்கான பதவி உயர்வுகளை வழங்கியுள்ளதாகவும் இதில் பல பதவி உயர்வுகள் மோசடியான முறையில் பெற்றுக் கொள்ளப்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது.

உரிய தகுதிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் கல்வித்துறையை சீரழிப்பதாகவும் உரிய முறையில் ஆய்வுகளை நடத்தி அதன் ஊடாக பதவி உயர்வு பெற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் முறைக்கேடுகள் | Irregularities In South Eastern University Of Sl

இவ்வாறு அதிகாரத்தில் இருப்பவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு பிழையான நிர்வாக நடவடிக்கைகளின் மூலம் பதவி உயர்வுகளை வழங்குவதானது மக்களின் பணத்தை விரயமாக்கும் செயல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இவ்வாறு முறைகேடுகளும் பிழையான நிர்வாக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்விசார் தகுதிகளை உயர்த்திக் கொள்வதற்காக இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு ஏற்கனவே வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், துணைவேந்தரால் வழங்கப்பட்ட 18 நியமனங்கள் வரவு செலவுத் திட்ட சுற்று நிருபத்திற்கு முரணானது என தெரிவிக்கப்படுகிறது. இந்த முறைகேடுகள் தொடர்பில் மனித உரிமை உரிமை ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்விசார் பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளில் இடம்பெற்று வரும் குறைபாடுகள், பல்லைக்கழக கல்வியின் தரத்தை மலினப்படுத்தும் வகையிலானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனமொன்றைப் போன்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்விச் செயற்பாடுகளில் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் இடம்பெறுவது பாரதூரமான பிரச்சினையாக உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வலுவடைந்துள்ள கத்லீன் புயலின் தாக்கம்: வெள்ளத்தில் மூழ்கியுள்ள பிரித்தானியா

வலுவடைந்துள்ள கத்லீன் புயலின் தாக்கம்: வெள்ளத்தில் மூழ்கியுள்ள பிரித்தானியா

இலங்கை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாரிய மோசடி: பெண் உட்பட இருவருக்கு அதிரடி உத்தரவு

இலங்கை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாரிய மோசடி: பெண் உட்பட இருவருக்கு அதிரடி உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு

06 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Montreal, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

06 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, மட்டுவில், கிளிநொச்சி, Scarborough, Canada

19 Jun, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US