ஜேர்மனியில் இலங்கை பெண்ணுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
ஜேர்மனி, குமார்ஸ்பார்க் நகரத்தின் (Gummersbach) சமூக ஜனநாயகக் கட்சியின் ( Social Democratic Party -SPD) வருடாந்த பொதுக்கூட்டத்தில், குமார்ஸ்பார்க் நகரத்தின் (Gummersbach) உள்ளூர் சங்கத்தின் புதிய தலைவராக (Chairman) மேரி ரொஷானி தனபாலசிங்கம் (Mary Roshani Thanapalasingham) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த தலைமை பதவி தேர்வுக்காக நடாத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 23 வாக்குகள் கிடைத்தமையினால் அவர் தலைவராக தேர்வாகியுள்ளார்.
அதற்கமைய, சங்கத்தின் உள்ள உறுப்பினர்களில் 23 உறுப்பினர்கள் ஆம் எனவும் 3 உறுப்பினர்கள் இல்லை எனவும் வாக்களித்துள்ள அதேவேளை, 1 உறுப்பினர் வாக்களிக்கவில்லை.
அறிமுக உரை
அவர், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், தனது அறிமுக உரையில், எதிர்வரும் 2025ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் பிரச்சாரத்தை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் குமார்ஸ்பார்க் நகரத்தின் சமூக ஜனநாயகக் கட்சி முன்னெடுக்கவேண்டிய முக்கியமான பணிகளை அடிக்கோடிட்டு காட்டியுள்ளார்.

மேலும், அவர் கட்சிப் பணிகளை விரைவாக தொடங்க விரும்புவதோடு, மே மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் திட்டமிடல் தொடர்பான கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan