உலகை அச்சுறுத்தும் ஈரானின் Sleeper Cells: பற்றியெரிந்த தெஹ்ரான்
நேற்றையதினம்(3.2.2026) ஈரானின் தலைநகர்தெஹ்ரானின் சில பகுதிகள் புகை மண்டலமாக காட்சி தந்தன.
தென் தெஹ்ரானின் ஜெனட் அபாட் என்ற பிரதேசத்திலுள்ள ஒரு சந்தைக் கட்டடத் தொகுதி திடீரென்று தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகின்றது.
ஈரானின் தலைநகரில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்து ஒரு சதித்திட்டமாக இருக்கலாம் என்கின்ற சந்தேகம் எழுகின்றது.
அது மட்டுமன்றி கடந்த சில தினங்களாக ஈரானின் பல்வேறு பகுதிகளிலும் திடீரென்று ஏற்படுகின்ற வெடிப்பு சம்பவங்களும், தீ விபத்துக்களும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றது.
இந்தநிலையிலே, ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் அருகே ஏற்பட்ட எரிவாயு கசிவுக்கு பின்னணியில் என்ன காரணங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
ஈரானின் உளவுப்படையான Iran Quds-ன் Sleeper Cells அமெரிக்காவில் ICE அதிகாரிகளால் கைது செய்யப்படுவது பற்றியும், அதன் பின்னணி பற்றியும் இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் நிராஜ் டேவிட் விளக்கியுள்ளார்.