ஒரே நாளில் மூன்று நாடுகளுக்கு ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான்
24 மணி நேரத்திற்குள் மூன்று நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி வடக்கு ஈராக்கில் உள்ள இஸ்ரேலிய மொசாட் உளவுப் பிரிவின் கட்டிடத்தை குறிவைத்து ஈரானிய இராணுவம் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாகவும், சில மணிநேரங்களுக்குப் பிறகு சிரியாவில் உள்ள ஐஎஸ் இலக்குகள் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஈராக்கின் எர்பில் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் உள்ள இஸ்ரேலிய மொசாட் உளவுத்துறை கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கட்டிடம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு 11 பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து வடக்கு சிரியா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா கண்டனம்
நேற்று, ஈரான் இராணுவம் பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தின் மீது மற்றொரு தாக்குதலை நடத்தியது, அங்கு இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பெண்கள் காயமடைந்தனர்.
பலுசிஸ்தான் மீதான ஏவுகணைத் தாக்குதல், ஈரானில் கடந்த பல குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஜெய்ஷ் அல்-அட்ல் பயங்கரவாத அமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.
மேலும் இந்த மூன்று தாக்குதல்களையும் கடுமையாக விமர்சித்த அமெரிக்கா, தாக்குதல்களுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri
