தீவிரமடையும் ஈரான் - இஸ்ரேல் மோதல்! நீளும் இலங்கையின் எரிபொருள் வரிசை
ஈரான் - இஸ்ரேல் மோதல் நிலை உலகளாவிய ரீதியில் எரிபொருளின் விலையில் தாக்கம் செலுத்தி வரும் நிலையில், இலங்கையிலும் எரிபொருளுக்கு பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பு ஏற்படலாம் என்று மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகின்றது.
இதன் காரணமாக அதிகளவான மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு படையெடுப்பதுடன், அதிகமான எரிபொருளை கொள்வனவு செய்து வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
எரிபொருள் தட்டுப்பாடா..??
இந்தநிலையில், நேற்றையதினம் அம்பாறை மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவான மக்கள் வரிசையில் காத்திருந்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை, பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டதையடுத்து எரிபொருள் தட்டுப்பாடு குறித்து போலியான செய்திகளை பரப்ப வேண்டாம் என மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கட்டுப்பாடுகளுடன் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடுவதாகவும், சில நிலையங்களில் எரிபொருள் இல்லை என்ற வாசகம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.










திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam
