சட்டமா அதிபர் எடுத்த தீர்மானம் தொடர்பில் விசாரிக்குமாறு உத்தரவு
X-Press Pearl பேரழிவு தொடர்பாக சிங்கப்பூரில் சிவில் வழக்குத் தொடர சட்டமா அதிபர் எடுத்த தீர்மானம் தொடர்பில் விசாரிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்மானம் நியாயமற்றதும் தன்னிச்சையானதும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வழக்கு தொடரத் தவறியமை
பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ தலைமையிலான ஐந்து நீதியரசர்கள் கொண்ட ஆயம், வழங்கிய 361 பக்க தீர்ப்பில், இலங்கையின் கடல் மாசு தடுப்புச் சட்டத்தின் கீழ் கப்பலின் உரிமையாளர்கள் மீது வழக்குத் தொடரத் தவறியதன் மூலம் சட்டமா அதிபர் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாகக் கண்டறிந்தது.
X-Press Feeders, Sea Consortium Lanka (Pvt) Ltd மற்றும் அதன் துணை நிறுவனங்கள் எதிர்வரும் செப்டம்பர் 23ஆம் திகதிக்குள் ஆரம்ப கட்டமாக 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டை செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பின்தொடர் விசாரணை செப்டம்பர் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



