164 இலங்கையர்களுக்கு சிவப்பு பிடிவிராந்து உத்தரவு
இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 164 இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு பிடிவிராந்து உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச பொலிஸாரிடம் இவ்வாறு சிவப்பு பிடிவிராந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
பாதாள உலகக் குழு செயற்பாடுகள், போதைப் பொருள் வர்த்தகம், போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக இவ்வாறு சிவப்பு பிடிவிராந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு
குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வரும் நோக்கில் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.
இந்தக் குற்றவாளிகளில் அநேகமானவர்கள் டுபாயில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட வேறும் நாடுகளிலும் மேலும் சில குற்றவாளிகள் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளப் வசந்த படுகொலையுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கஞ்சிபானை இம்ரான் பிரான்சில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. இவருடன் குடு அஞ்சு என்ற மற்றுமொரு பாதாள உலகக் குழு தலைவரும் பிரான்ஸில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை
சர்வதேச காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் இந்த சந்தேக நபர்களை கைது செய்து நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
டுபாய், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வரும் பாதாள உலகக் குழுத் தலைவர்களை கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கும் சிவப்பு பிடிவிராந்து உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
