இலங்கைக்குள் ஆள ஊடுருவிய சர்வதேச ராடார்கள்!
இலங்கை படையினர், அவர்களின் முன்னைய அணி சேரா கொள்கையில் தற்போது தாக்குப்பிடிக்க முடியாமல் இருப்பதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அருஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், சிங்கப்பூரில் நடைபெறும் ஆசிய-பசுபிக் பிராந்தியத்திற்கான பாதுகாப்பு மாநாடான, சங்கரில்லா பாதுகாப்பு மாநாட்டில், அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் உட்பட பலர் முற்றுமுழுதாக தென்னாசிய பிராந்தியத்தை குறி வைத்து பேசுகின்றனர்.
அத்துடன் ஆசிய நாடுகள் சீனாவில் பொருளாதார ரீதியாக தங்கியிருப்பதிலிருந்து விடுபட வேண்டும் எனவும் சீனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆசிய நாடுகள் அணிதிரள வேண்டும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆசிய நாடுகளை அமெரிக்க ஒரு போருக்கு தயார்படுத்திக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு இலங்கை உட்பட பல நாடுகளின் பாதுகாப்பு செயற்பாடுகள் மற்றும் இலங்கைக்குள் ஆள ஊடுருவிய சர்வதேச ராடார்கள் குறித்து கலாநிதி அருஸ் தெரிவித்த கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்...,