தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள சர்வதேச அமைப்புக்கள்
உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்றைய தினம் இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டுக்கான புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு தெரிவு செய்யும் வகையில் இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை வாக்கெடுப்பு இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் முல்லைத்தீவு தேர்தல் செயற்பாடுகள் சுகந்திரமானதும், நியாயமானதும், முரண்பாடுகள் அற்றதுமான விதத்தில் நடைபெறுகின்றதா என்பதை கண்காணிப்பதற்கு ட்ரான்ஸ்பரன்சி இன்ட்டநஷ்னல் (tisl) நிறுவனத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அங்கு தேர்தல் பணிகள் மிக சுமூகமான முறையில் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri