ராஜபக்சவினர் இருக்கும் வரை சர்வதேச உதவிகள் கிடைக்காது: ரணிலின் இறுதி அரசியல் அத்தியாயம் - ராஜித சேனாரத்ன

Dr Rajitha Senaratne Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sajith Premadasa Rajapaksa Family
By Steephen Jun 22, 2022 08:23 AM GMT
Report

ராஜபக்சவினரின் கீழ் தற்போதைய அரசாங்கத்தை பொறுப்பேற்பதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த முடிவு எந்தளவுக்கு சரியானது என்பதை நாட்டு மக்கள் புரிந்துக்கொண்டுள்ளனர் என நம்புவதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் தலைமையின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பொறுப்பேற்றிருந்தால், எங்கிருந்தும் உதவிகள் கிடைக்காது.

எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தூரநோக்கு சிந்ததனை காரணமாக அவர் அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை. ராஜபக்சவினர் இருக்கும் வரைக்கும் நாட்டை கட்டியெழுப்ப சர்வதேச உதவிகள் கிடைக்காது.

மத்திய கிழக்கு நாடுகள் ஒரு சொட்டு எரிபொருளையும் வழங்காது

ராஜபக்சவினர் இருக்கும் வரை சர்வதேச உதவிகள் கிடைக்காது: ரணிலின் இறுதி அரசியல் அத்தியாயம் - ராஜித சேனாரத்ன | International Aid Sri Lanka Rajapaksa

ஐரோப்பா உட்பட வளர்ச்சியடைந்த நாடுகளிடம் இருந்து எமக்கு எப்போதும் உதவிகள் கிடைக்காது. ராஜபக்சவினர் பரப்பிய முஸ்லிம் எதிர்ப்பு காரணமாக நிவாரண உதவியாக மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து ஒரு சொட்டு எரிபொருள் கூட கிடைக்காது.

எனினும் எமது எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையின் கீழ் சரியான முறையில் சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுமாயின் மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் செலுத்தும் கடன் அடிப்படையில் எரிபொருள் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியும்.

ஜனாநாயக ஆட்சி நிர்வாக வரைவை முன்வைப்பதன் மூலம் ஐரோப்பா உட்பட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு உதவும். தற்போதைய அரசாங்கத்திற்கு உதவ எவரும் முன் வர மாட்டார்கள் என்பது தெளிவானது.

இறுதியில் ஒரு நபர் காரணமாக முழு நாடும் துன்பத்தை அனுபவித்து வருகிறது. இதனால், நாங்கள் கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து வெளியேறுமாறு கூறுகின்றோம்.

ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி விட்டு, சர்வக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவோம்.

ரணிலையும் விரட்ட வேண்டும்:ரணிலின் இறுதி அரசியல் அத்தியாயம்

ராஜபக்சவினர் இருக்கும் வரை சர்வதேச உதவிகள் கிடைக்காது: ரணிலின் இறுதி அரசியல் அத்தியாயம் - ராஜித சேனாரத்ன | International Aid Sri Lanka Rajapaksa

இன்னும் ஒரு வாரத்திற்குள் ரணில் விக்ரமசிங்கவையும் விரட்ட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னிடம் கூறினர்.

இதுதான் தற்போது அரசாங்கத்திற்குள் இருக்கும் நிலைமை. ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க கூறுவதை ஜனாதிபதி கவனத்தில் கொள்வதில்லை என்பதே இதற்கு காரணம்.

இப்படியான துயரமான நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். முழு ஐக்கிய தேசியக் கட்சியையும் அழித்த ரணில், தற்போது நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகமிழைத்து விட்டு, தனது அரசியலில் இறுதி அத்தியாயத்தில் இருந்து வருகிறார் எனவும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

02 Jul, 2013
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை முள்ளானை, Mississauga, Canada

24 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Scarborough, Canada

25 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Montreal, Canada, Toronto, Canada

30 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, தமிழீழம், சென்னை, India

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US