கோட்டாபயவை அரசியலுக்கு கொண்டு வந்தமைக்கு புத்திஜீவிகளே பொறுப்பு-நிமல் லங்சா
அரசியல் தெரியாத மற்றும் புரியாத கோட்டாபய ராஜபக்சவை அரசியலுக்கு கொண்டு வந்தமைக்கு புத்திஜீவிகள் பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லங்சா தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவை நான் அரசியலுக்கு கொண்டு வரவில்லை

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கோட்டாபய ராஜபக்சவை நான் அரசியலுக்கு கொண்டு வரவில்லை. அவரை அரசியலுக்கு கொண்டு வருமாறு நாட்டின் வேறு குரல்கள் எழுப்பட்டன.
புத்திஜீவிகள் எனக்கூறிகொள்வோர் கோட்டாபயவுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கினர்

எழுப்பட்ட அந்த குரல்களுக்காகவே நான் அவரது வெற்றிக்காக பாடுபட்டேன். புத்திஜீவிகள் எனக்கூறிக்கொள்வோர் கோட்டாபய ராஜபக்சவை அரசியலுக்கு கொண்டு வந்து அவருக்கு தவறான ஆலேசானைகளை வழங்கினர் எனவும் நிமல் லங்சா குற்றம் சுமத்தியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச அரசியலுக்கு வர வேண்டும் என்று பௌத்த பிக்குமார், சிங்கள தேசியவாதிகள் உட்பட புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அத்துடன் ஹிட்லரை போன்ற ஒருவர் நாட்டின் தலைவராக வர வேண்டும் எனவும் அதற்கு பொறுத்தமானவர் கோட்டாபய ராஜபக்ச எனவும் பௌத்த பிக்கு ஒருவர் பகிரங்கமாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 20 மணி நேரம் முன்
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam