பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் திடீர் பரிசோதனை
திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் திடீர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக மாணவர் விடுதிகளுக்கு வெளி நபர்கள் நீண்டகாலமாக உணவு வழங்கி வருகின்றனர்.
இவர்கள் தொடர்பில் தொடர்ச்சியான பல முறைப்பாடுகள் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் இற்கு கிடைக்கப்பெற்றது.
சட்ட நடவடிக்கை
இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம்(30) விடுதிகளிற்கு உணவு வழங்குவோரிடம் திடீர் பரிசோதனை மேற்கொண்டனர்.

இனங்காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டதோடு, குறைபாடுகளை விரைந்து நிவர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், எதிர்காலத்தில் தொடர்ந்து குறைபாடுகள் இனங்காணப்படும் இடத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri