லொறி மோதி இளைஞர் பலி
கண்டி, நாவலப்பிட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சிறப்பு அங்காடி கிளை ஒன்றில் பொருள்கள் இறக்க முற்பட்ட போது இடம்பெற்ற விபத்தில், லொறியின் உதவியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தத் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குருநாகல் பகுதியிலிருந்து நாவலப்பிட்டியிலுள்ள சிறப்பு அங்காடிக்கு உணவுப் பொருள்களை ஏற்றி வந்த கனரக லொறி ஒன்று, நேற்று(01.05.2026) காலை பொருள்களை இறக்குவதற்காகப் பின்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
இதன்போது, லொறியின் பின்புறத்துக்கும் அங்கிருந்த களஞ்சியசாலைச் சுவருக்கும் இடையிலான குறுகிய இடைவெளியில் லொறியின் உதவியாளர் எதிர்பாராத விதமாகச் சிக்குண்டுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த 24 வயதுடைய இளைஞர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பாக லொறியின் சாரதியை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri