வங்கி அமைப்பு மூலம் வழங்கப்படும் கடன் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு
வங்கி அமைப்பு மூலம் அரச துறைக்கு வழங்கப்படும் கடன் அளவு குறையும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அரசுக்கு சொந்தமான வணிக நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்தல் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்பு மாற்றங்களுடன், அரச நிதி ஒருங்கிணைப்பு செயன்முறையை தொடர்ச்சியாக முன்னெடுப்பதன் உதவியுடன் இது நிகழும் என இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய வருடாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் (2025) தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று உள்நாட்டு நிதியுதவி
இதற்கிடையில், அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு நிதியளிக்க மத்திய வங்கி நிதி வழங்காத சூழலில், வெளிநாட்டு நிதியுதவிக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் காரணமாக அரசாங்கம் மாற்று உள்நாட்டு நிதியுதவியை நாட வேண்டியிருக்கும்.

மேலும், உலகளாவிய மற்றும் உள்நாட்டு அதிர்ச்சிகளைத் தாங்குவதற்கும், அதன் மூலம் அரசாங்கத்தின் செயல்பாடுகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கும் போதுமான நிதி இருப்புக்களைப் பராமரிப்பது அவசியம் என்றும் அது குறிப்பிடுகிறது.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan