வங்கி அமைப்பு மூலம் வழங்கப்படும் கடன் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு
வங்கி அமைப்பு மூலம் அரச துறைக்கு வழங்கப்படும் கடன் அளவு குறையும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அரசுக்கு சொந்தமான வணிக நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்தல் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்பு மாற்றங்களுடன், அரச நிதி ஒருங்கிணைப்பு செயன்முறையை தொடர்ச்சியாக முன்னெடுப்பதன் உதவியுடன் இது நிகழும் என இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய வருடாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் (2025) தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று உள்நாட்டு நிதியுதவி
இதற்கிடையில், அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு நிதியளிக்க மத்திய வங்கி நிதி வழங்காத சூழலில், வெளிநாட்டு நிதியுதவிக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் காரணமாக அரசாங்கம் மாற்று உள்நாட்டு நிதியுதவியை நாட வேண்டியிருக்கும்.

மேலும், உலகளாவிய மற்றும் உள்நாட்டு அதிர்ச்சிகளைத் தாங்குவதற்கும், அதன் மூலம் அரசாங்கத்தின் செயல்பாடுகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கும் போதுமான நிதி இருப்புக்களைப் பராமரிப்பது அவசியம் என்றும் அது குறிப்பிடுகிறது.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri