கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை தொடர்பில் சற்றுமுன் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை கல்வி அமைச்சு விடுத்துள்ளது.
இதற்கமைய 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாண்டிற்கான கற்றல் செயற்பாடுகள்
இதேவேளை பாடசாலைகளுக்கான இவ்வாண்டிற்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட செயற்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.
அத்துடன் ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இவ்வாண்டிற்கான இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி முதல் எதிர்வரும் அக்டோபர் மாதம் மாதம் 27ஆம் திகதி வரையில் இடம்பெறும் என்றும், மூன்றாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் அக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 24ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும், மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி வரை இடம்பெறும் என்றும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
