கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய ஐரோப்பிய நாட்டவர் யார்? (Video)
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலி விமான கடவுச்சீட்டு மூலம் பிரான்ஸிற்கு தப்பிச் செல்ல முயற்சித்தவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய குறித்த நபர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்ச்சைக்குரிய நபர் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதற்கமைய குறித்த வெளிநாட்டவர் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த நபர் 35 வயதுடைய போலந்து நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது
2019ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் ATM இயந்திரத்தை உடைத்து பணம் திருடியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்புபட்ட செய்தி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பு - அதிரடி படையினர் நடவடிக்கை
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam