கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய ஐரோப்பிய நாட்டவர் யார்? (Video)
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலி விமான கடவுச்சீட்டு மூலம் பிரான்ஸிற்கு தப்பிச் செல்ல முயற்சித்தவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய குறித்த நபர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்ச்சைக்குரிய நபர் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதற்கமைய குறித்த வெளிநாட்டவர் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த நபர் 35 வயதுடைய போலந்து நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது
2019ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் ATM இயந்திரத்தை உடைத்து பணம் திருடியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்புபட்ட செய்தி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பு - அதிரடி படையினர் நடவடிக்கை





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
